Friday, March 8, 2013

உன் நினைவுகள்...

உன்னை
மறக்க எண்ணி
விழி மூடினால்,
மூடிய இமைகளுக்குள்
என்னையே நோக்கியபடி
நான்
இமை பிரிக்க காத்திருந்த
உன் கண்களே வருவதாய்!! 

என் பேருந்து பயணங்களில் எல்லாம்
அதிகாலை பேருந்தில்,
காற்று
என் உறக்கத்தை
கலைக்க முயன்று தோற்ற நொடி,
பூங்காற்றாய்
நீ என்னை சீண்டியதும்,
நான் துயில் கலைந்த
நம் முதல் பயணமே
நினைவு வருவதாய்!!


அந்தி மயங்கும் வேளையில்,
ஏதேதோ யோசித்திருந்த பொழுதில்,
அனுமதியின்றி
ஆர்பரிக்கிறது,
அன்றொரு நாள்
கடல் அலைகளின் சத்தத்தில்
நீ
மனம் திறந்து
பேசிய வார்த்தைகள்!!

அவசர கதியிலான
என்
ஒவ்வொரு
ரயில் பயணங்களிலும் கூட,
நீ கையசைத்து
விடை கொடுத்த
நம்
முதல் பிரிவே நினைவாய்!!


 என்
கை பிடித்து
எழும் குழந்தையின்
தீண்டலில் உணர்கிறேன்,
என்
கை கோர்த்த,
உன்
விரல் ஸ்பரிசத்தை!!





சூரியனின்
வருகைக்காய்
காத்திருக்கும் தாமரை போல,
உனக்காகவே
காத்திருக்கும் என்னை,
நீ
உணராமலே போவது
ஏன்??

எங்கும்
நீயே நிறைந்திருக்க,
உன்னை
மறக்க முயன்று
தோற்கிறேன் நான்!!

No comments:

Post a Comment