நாம் ஒன்றாக
நடந்த பாதையில்,
நான் தனியாக
இப்போது
கடந்தவை பல!!
மனதின் பக்கங்களில்
நீ
நிறைந்திருப்பதை போல,
நான்கு திசைகளிலும்
நீயே நிறைந்து,
என்
பிரபஞ்சமாகி கொண்டிருக்கிறாய்!!
உன்னிடம் பகிர
ஓராயிரம் விஷயம்
சேர்கின்றன,
தினமும்!!
கனவில் நித்தமும்
உன்னிடம் கூற
நேரமே போதுவதில்லை!!
ஒரு முறையேனும்
வந்து விடு!!