உன்னை
மறந்ததாகவே
நினைக்கிறேன்!!
கனவில்
உனை கண்டு,
நிஜத்தில்
கண்ணீர் திரள்வதை
நான்
உணராத வரை!!
உன்னை
மறக்க
சொல்லி கட்டாயபடுத்தும்
என்
மூளையின் கட்டளையை
அழகாய்
மறக்க செய்கிறது,
என்
மனது!!
கண்மூடும்
ஒவ்வொரு வேளையும்
உன்னை
கண்
முன் நிறுத்தி!!
உன்னை
நான்
மறந்து விட்டதாய்
போடும்
நாடகத்தில்,
நான்
வென்று கொண்டிருக்கிறேன்!!
எனக்கு
நான்
அன்னியம்
ஆகி கொண்டே!!!
"எங்கேயாவது
வெளியே செல்லலாம்"
என
நான் சொல்லும் போது எல்லாம்,
அது
நான்
"உன்னை
மறக்க செய்யும் முயற்சியா"
இல்லை,
"உன்னை சந்திக்க செய்யும் முயற்சியா"
என தெரிவதே இல்லை,
எனக்கு!!
No comments:
Post a Comment