அதிகாலையில்
உன்னை எழுப்பி
சூரியனை தரிசிக்க சொன்னால்,
விடியுமுன்பே
கண்டதாய் கூறுகிறாய்!!
கேள்வியாய் நோக்கினால்,
"உன் கண்களில்"
என்கிறாய்!!
என்
செல்ல சோம்பேறி கணவா,
உன் சோம்பேறித்தனதிற்க்கும்
காதலையே காரணமாக்கினால்
என்ன செய்வேனடா, நான்??
....
பூங்காவில்,
பூக்களை ஆசையுடன்
நான் பார்க்க,
நீயோ முறைக்கிறாய்!!
"உன் கண்கள்
விரும்புவது
நானாக மட்டுமே
இருக்க வேண்டும்"
என்கிறாய்...
செல்லமாய்
உன்னை சீண்ட எண்ணி,
"பூக்களுடன் பொறாமையா"
என்றேன்..
அலட்டாமல் நீயோ,
"பூவுக்காக தானே" என்கிறாய்...
உன்னை சேர என்ன தவமடா
செய்து விட்டேன் நான்!!!
.....
.....
செல்லமாய்
சண்டையிடுகையில் ஒரு நாள்,
"வேறு பெண்ணை மணந்திருக்கலாம்" என்றாய்...
கதவை சாத்தி அழுதேன்!!
நீயோ மென்மையாய்
என் அருகில் அமர்ந்து,
உன் கூர் விழிகளால் எனை பார்த்து,
"ரோஜாவை விற்று,
அதை விட உயர்ந்ததாய்
எதனை வாங்க முடியும்"
என்கிறாய்...
"உன் மென்மை, வன்மை
இரெண்டும் எனக்கே!!"
பெருமிதமாய் உணர்கிறேன்....
No comments:
Post a Comment