Saturday, March 9, 2013

ரயில் பயணம்...

அம்மாவின் மடி பயணமாய்
முன் எப்போதும்
தோன்றும்
ரயில் பயணம்,
இன்று
உன் பிரிவில் வெறுக்கிறதடி,
என்றாய்!!
இருந்தும், ஏனடா 
திரும்பவில்லை??
என் பிரிவின்
ஏக்கத்தை
உனக்கு நான் உணர்ததாலோ?? 
தளரவில்லை
என இருந்து விட்டாயோ??
தளரவில்லை தான்!!

ஆனால்,
மடிந்தே விட்டேனடா!!
உன்னாலும் கூட
என்னை தளிர்க்க செய்ய முடியாதபடி!!

No comments:

Post a Comment