Friday, March 8, 2013

நிழலும்... நிஜமும்...

அந்தி மாலை பொழுதில் ,
மூன்றாம் பிறையாய் நிலவு
எட்டி பார்த்து கொண்டிருக்க,
வெண்தாமரை பூக்கள்
மலர்ந்திருக்கும் குளக்கரையில்,
நம்மை சுற்றியுள்ள
மரங்கள்  எல்லாம்
நிழல்களாய் தெரிய ,
தண்ணீரில் கால் நனைத்து
இருவரும் கதை பேசினோம்!!!


சட்டென்று வந்த
ஆர்பாட்டமான மின்னல்கள் உணர்த்தின!!!
மரங்களெல்லாம் நிஜமென்றும்!!
நீ மட்டுமே
நிழல் என்றும்!!!!


No comments:

Post a Comment