Saturday, March 9, 2013

பிறந்த நாள் வாழ்த்து

ஆழ்ந்த உறக்கத்தில்
நான் நிலைத்திருக்க,
ஆதவன்
எழும் நேரத்தில்
எனை எழுப்பினாய்!!
சிணுங்கலாய் நான் பார்க்க,
கெஞ்சலாய் நீ பார்க்கிறாய்!!

செல்ல கோபத்துடன்,
சலுகையாய்
உன் தோல் சாய்ந்து,
கை கோர்த்து நடந்தேன்!!

நிமிடத்தில்
கை விலக்கி
கண் பொத்தினாய்!!
உன் விழிகள்
எனக்காய் பார்க்க,
எதிலோ அமர்த்தி
கை விலக்கினாய்!!

கண் இமைகளை
நான் பிரிக்க,
நம் காதலை கண்ட
ஆதவனோ,
செங்கொலுந்தாகி
மௌனமாய் எழுகிறான்!!

எனை மறந்து
நான் அதை ரசிக்க,
மென்மையாய்
ஊஞ்சல் அசைத்து, ரகசியமாய்
பிறந்த நாள் வாழ்த்து கூறி, புருவம் உயர்த்துகிறாய்,  கேள்வியாய்!!


ஆதவன் விழித்தெழ,
மென்மையாய் ஊஞ்சல் அசைய,
பன்னீர் மரங்கள் பூக்கள் செரிய,
தென்றலாய் நீ வாழ்த்து கூற,
நான் மறுமுறை பிறக்கிறேன்!!

என்ன சொல்ல முடியும் நான்??
கண்மூடி
 உன் தோல் சாய்ந்து,
இந்த நொடி
நீடிக்க பிரார்த்திப்பதை தவிர!! 

No comments:

Post a Comment