Saturday, March 23, 2013

தமிழ் காதல்....

உன்னிடம் ஓர் நாள்,
உனக்காய்,
"வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்"
என்பதற்கு பதிலாய்,  
"விழி மேல் வழி வைத்து காத்திருக்கிறேன்"
என்றேன்... 
தமிழை கொல்லாதேடி பாவம்!!
என்றாய்..


சமாளிப்பதற்காய்  அவசரமாய்....
"நீ வரும் பாதைகளில்,
என் விழிகளை பதிக்க வில்லையடா!!
உனக்காக
என் விழிகளையே,
பாதையாய் பதித்திருக்கிறேன்!!"
என்றேன்..
"தமிழை கொல்லாதே"
என்றதற்காய்,  இப்படி
என்னை கொள்கிறாயேடி ராட்சஸி!!
என்கிறாய்.... 

No comments:

Post a Comment