சூரியனின் பார்வையில்
நாணல்கள் நாணத்துடன் தலை கவிழ,
சலசலத்து ஓடும் நீரோடையில்
தன்னவளின் முகம் பார்த்தான்,
ஆதவன்!!
நாணத்தில் சிலிர்த்தன பயிர்கள்!!
தென்றலும்
இதனை ரசிக்கும் வேளையில்
என் ஆதவனுக்காக காத்திருந்தேன் அங்கே!!
சிலமணி தாமதங்களில் நீ வர,
ஊடலாய் தலை கவிழ்ந்தேன்!!
நீயோ
வார்த்தைகளின்றி
என்னருகில் அமர்ந்து,
நீரில் விழும் என் பிம்பத்தை
சீண்டுகிறாய் செல்லமாய்!!!
உன் காதலை கண்டு
ஆதவனே ஒளிந்து கொள்கிறானடா!!!
நாணல்கள் நாணத்துடன் தலை கவிழ,
சலசலத்து ஓடும் நீரோடையில்
தன்னவளின் முகம் பார்த்தான்,
ஆதவன்!!
நாணத்தில் சிலிர்த்தன பயிர்கள்!!
தென்றலும்
இதனை ரசிக்கும் வேளையில்
என் ஆதவனுக்காக காத்திருந்தேன் அங்கே!!
சிலமணி தாமதங்களில் நீ வர,
ஊடலாய் தலை கவிழ்ந்தேன்!!
நீயோ
வார்த்தைகளின்றி
என்னருகில் அமர்ந்து,
நீரில் விழும் என் பிம்பத்தை
சீண்டுகிறாய் செல்லமாய்!!!
உன் காதலை கண்டு
ஆதவனே ஒளிந்து கொள்கிறானடா!!!
No comments:
Post a Comment